<span;><span;>யாழில் (Jaffna) உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<span;>சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<span;>சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை என தெரிவித்துள்ளார்