By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வெடுக்குநாறிமலை நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! நாடாளுமன்றில் சிறீதரன் எடுத்துக்காட்டு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! நாடாளுமன்றில் சிறீதரன் எடுத்துக்காட்டு!

Published March 21, 2024
Share
2 Min Read
SHARE

அண்மைக்காலமாக தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் சுயநலத்திற்க்காக தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளும் புதைக்கப்பட்டு வருகின்றன.

இதனை வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தக்கூடிய சம்பவம்தான் அண்மையில் வெடுக்குநாறிமலையில் நடந்த பொலிஸாரின் அடாவடித்தனம்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை (19) வவுனியா நீதிமன்ற நீதவானால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களை விடுதலை செய்த நீதவானுக்கு வடக்கு எமது உரிமை என்ற சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று (20) நாடாளுமன்றத்தில் எஸ்.சிறீதரன் கடும் வாதமொன்றை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முகநூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.

இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெடுக்குநாறிமலையில் நடந்த காவல்துறை அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள். தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும் ? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல.

அது ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது எனவே வெடுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது. இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்ரமநாயக்கதான்.

அவர் ஒரு நேர்மையாக கள்ளம் கபடமற்று இதய சுத்தியோடு செயற்படுவாரேயானால் இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் காவல்துறையினரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரது இந்த கருத்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் இனவாத எதிர்ப்பை நேரடியாக சுட்டிக்காட்டுவதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: வவுனியா, வெடுக்குநாறிமலை
Editor S.Shanuja March 21, 2024 March 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் நாளை ஆரம்பமாகும் ஐ.பி.எல்!
Next Article கோப் குழுவில் இருந்து விலகினார் டிலான் பெரேரா!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?