By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: எல்லை மீறினால்த் தொல்லை !!!!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

எல்லை மீறினால்த் தொல்லை !!!!

Published December 25, 2021
Share
1 Min Read
SHARE

எல்லை மீறினால்த் தொல்லை !!!!

எல்லை மீறுதல்
எப்போதுமே தொல்லை மட்டுமல்ல
துயரமும் கூட ….

எல்லைகளை மீறி எவரும்
தொல்லைகளைக்
கொடுத்தலை எல்லோரும்
எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை
தொல்லைகளைத் தவிர்க்க
எல்லை மீறி அவர்களும்
தொல்லைகளோடு துயரங்களையும்
கொடுப்பார்கள் ….

எல்லை மீறிக் கடலில்
குப்பைகளைக் கொட்டித்
தொல்லை கொடுத்த மனிதனுக்கு
நல்ல பாடம் சொல்ல
எண்ணி வெளிக்கிட்ட கடல்
தன் எல்லை கடந்து
சுனாமியாய் இறங்கி ஊருக்குள்
வந்து தன் வயிற்றில் சுமந்திருந்த
குப்பைகளை மீண்டும் மனிதனின்
முகத்தில் துப்பி விட்டுப் போனது ….

துப்பிய வேகத்தில்
ஆணவம் உட்பட மனிதனின்
அத்தனையும் அழிந்தது….

கால்களைக் கழுவி நனைத்து
இடை இடையே வந்து
தடவித் தடவிக் கரைகிடக்கும்
கால்த்தடங்களை மட்டுமே
கரைக்கு அடங்கிய
கடலுக்கு அழிக்கத்தெரியும்
என்று எண்ணிய மனிதன்
கடல் நினைத்தால் பொறுமை
கடந்து பொங்கிக்கரை கடந்தால்
தடங்களை மட்டுமல்ல
இடங்களைக் கூட  இல்லாமல் செய்யும் என்பதை அறிந்து கொண்டான் …..

எல்லை மீறித் தொல்லை
கொடுத்தால் இழப்புகள் தங்கள்
கொல்லைகளில் குடியேறும் என்பதை
எல்லை மீறுவோர் தங்கள்
எண்ணங்களில் கொள்ள வேண்டும் …..

—காரைக்கவி—

oira8 December 25, 2021 December 25, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் துப்பாக்கிச் சூடு!
Next Article வவுனியாவில் தொடர்ந்து வெடிக்கும் காஸ் அடுப்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

ஆண் பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!

September 9, 2022

போருக்குப் பின் பெண் புலிகள் நிலை என்ன!_கருணாகரன்!

August 31, 2022

இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!

February 6, 2022
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?