By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் ஊடக சந்திப்பு இன்று (26) இடம்பெற்றது. 

இவ் ஊடக சந்திப்பில் கெளதாரி முனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ச.கணேச மூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்

“கல்முனையிலிருந்து பள்ளிக்குடா வரை காற்றாலை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது . குறுகிய நிலப்பரப்பு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதனால் காற்றாலை பொருத்த பொருத்தமற்ற பிரதேசமாகும்.

இந்நடவடிக்கையால் கெளதாரி முனை மீனவர்கள் மாத்திரமல்ல யாழ்மாவட்ட மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் காற்றாலை பொருத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்ற போது அதனை எதிர்த்தோம்” என்றார்.

தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பள்ளிக்குடா கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர்
செ.டசின் கனிடஸ் கருத்து தெரிவிக்கையில்,

“பள்ளிக்குடா கிராமமும் காற்றாலை பொருத்தப்பட்டிருப்பதனால் பாதிக்கப்படுவதுடன் கரையோர தாவரங்களும் அழிவடைகின்றது. காற்றாலைகளின் அதிர்வு காரணமாக மீன்கள் பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மீன்களின் இனப்பெருக்கமும் இடம்பெறாது.

இப்பிரச்சனைத் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இப் பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி இருந்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பரிமளா கருத்து தெரிவிக்கையில்,

“சமுர்த்தி இடை நிறுத்தும் செயற்பாடு நடைபெற்று வருவதாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்”

தொடர்ச்சியாக இவ் ஊடக சந்திப்பில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாச தலைவர்
யோசப் பிரான்சித் கருத்துத் தெரிவிக்கையில்,

“மீனவர்கள் தொடர்ந்து துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர். ஏழு நாட்களில் மூன்று நாட்களை இந்தியன் ரோலர் பறிக்கிறது.

ஆழ்கடலில் தொழில் செய்வதற்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் மானிய முறையில் எரிபொருளை வழங்க கடற்றொழில் அமைச்சர்  நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு அரசாங்கம் சட்டங்களை நடைமுறைப்படுத்தி படகுகளை அரசுடைமையாக்க வேண்டும்” என்றார்.

TAGGED: கிளிநொச்சி
oira8 December 26, 2021 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சிறப்புடன் ஆரம்பமாகியது வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் நிகழ்வு
Next Article ஸ்தாபகர் நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?