தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த விலைச் சுட்டெண்படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியிருந்தது.
அதேவேளை, 2023 நவம்பரில் 2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் தற்போது வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கமைய இந்த மாதத்திற்கான பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும். நாளாந்தம் உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் தமது அதிருப்தியையும் வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.