By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஞானசாரதேரர் இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமால் ஆக்குவார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அச்சம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஞானசாரதேரர் இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமால் ஆக்குவார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அச்சம்

Published December 30, 2021
Share
1 Min Read
SHARE

ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமல் செய்வார் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (30) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

“சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் 30ம் திகதி ஆகும். அன்றைய தினத்தில் மாதம் தோறும் குறித்த போராட்டத்தை நாங்கள் செய்து வருகின்றோம். எங்களுடைய உறவுகள் வரும்வரை இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்.

எங்களுடைய உறவுகளை பிடித்து செல்லும்போது, 18 அல்லது 19 வயதாக இருந்தது. இன்று 28 அல்லது 30 வயதாகிவிட்டது.

இராணுவமயப்படுத்தப்பட
வேண்டும் என ஞானசார தேரர் கூறியிருக்கின்றார். ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்ட நிலையில்தான் இன்று எங்களுடைய பிள்ளைகளை தொலைத்து தெருவில் நிக்கின்றோம்.

மேலும் ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார்களேயன்றி, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலேயே போகின்றது. அவ்வாறு இராணுவமயமாக்கப்பட்டால் மேலும் எமது உறவுகளை இழப்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மங்களேஸ்வரி என்ற தாயார் குறிப்பிடுகையில்,

“இளநீர் வாங்க சென்ற எனது பிள்ளை காயப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை எனது பிள்ளை தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. அந்த ஒரு பிள்ளை மாத்திரமே எனக்கு. இன்று நோய்வாய்ப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன்.

இராணுவ ஆட்சியில்தான் எமக்கு இவ்வளவும் நடந்தது. மேலும் இராணுவ ஆட்சியை கொண்டுவந்து முழு தமிழரையும் அழிப்பதற்கே திட்டம் செய்கின்றார்கள். எங்களிற்கு இராணுவ ஆட்சி வேண்டாம். எமக்கு எங்கள் பிள்ளைகளை மாத்திரம் தந்தால் போதும் “என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

TAGGED: கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
oira8 December 30, 2021 December 30, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் – பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!
Next Article மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீண்டும் வடக்கில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?