By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: லெஜண்ட்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்;  இலங்கையின் 9 வீரர்கள் ஏலத்தில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

லெஜண்ட்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்;  இலங்கையின் 9 வீரர்கள் ஏலத்தில்!

Published September 4, 2024
Share
1 Min Read
SHARE

இந்தியாவில் நடைபெறவுள்ள ஓய்வுபெற்ற வீரர்களுக்கான 3வது லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை அணியின் 9 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

6 அணிகள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வியாழக்கிழமை டில்லியில் நடைபெற்றது. இதில் 97 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதன்படி, இம்முறை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் இசுரு உதான மாறினார். அவரை 62 இலட்சத்திற்கு (இந்திய பணப்பெறுமதி) அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. அதேபோல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரராக தவால் குல்கர்னி இடம்பிடித்தார். அவரை 50 இலட்சத்திற்கு இந்தியா கெபிடல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

மேலும் 8 இலங்கை வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர். அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப்பை 49 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்னவை குஜராத் ஜயண்ட்ஸ் அணி 22.78 இலட்சம் ரூபாய்க்கும், டில்ஷான் முனவீரவை ஒடிசா கொனார்க் சூர்யாஸ் அணி 15.5 இலட்சம் ரூபாய்க்கும், மனிபால் டைகர்ஸ் அணி அஞ்சலோ பெரேராவையும் (41 இலட்சம் ரூபா), அசேல குணரட்னவையும் (36 இலட்சம் ரூபா) ஒப்பந்தம் செய்தது.

இதேவேளை, சதர்ன் சுப்பர்ஸ்டார்ஸ் அணி, ஜீவன் மெண்டிஸ் (15.60 இலட்சம் ரூபா), சுரங்க லக்மால் (34 இலட்சம் ரூபா) மற்றும் சதுரங்க டி சில்வா (29 இலட்சம் ரூபா) ஆகிய மூவரை ஏலத்தில் வாங்கியது. சகலதுறை வீரரான திசர பெரேராவை மனிபால் டைகர்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

TAGGED: லெஜண்ட்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்
Editor S.Shanuja September 4, 2024 September 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அறிவுறுத்தல்களின்படி செயற்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்;  தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் சுட்டி்ககாட்டு!
Next Article இலஞ்சம் பெற்ற வருமான வரி பரிசோதகர்கள் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?