By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல்; பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல்; பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Published January 26, 2024
Share
2 Min Read
SHARE

பாடகி பவதாரிணியின் பூதவுடல் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் பூதவுடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது பூதவுடல் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணியின் பூதவுடல் இன்று (26) நள்ளிரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இறுதிக்கிரியைகள் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மறைந்த பின்னணிப் பாடகி பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47 ஆவது வயதில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 7.30 அளவில் காலமானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் மறைந்த பவதாரிணியின் பூதவுடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாலை இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பவதாரிணியின் பூதவுடல் சென்னை தியாகராய நகரிலுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான இவர், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியாவார்.

மறைந்த பவதாரிணி, ராசய்யா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ எனும் பாடலுக்காக தேசிய விருது பெற்றதோடு, மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் பாடியுள்ளார். காற்றில் வரும் கீதமே, ஔியிலே தெரிவது, தென்றல் வரும், போன்றவை அவருடைய தனித்துவம் மிக்க குரலுடன் வௌியான சில பாடல்களாகும்.

‘மித்ர் மை பிரண்ட்’ , பிர் மிலேங்கே ஆகிய ஹிந்திப் படங்களுக்கும் தமிழில் இலக்கணம், அமிர்தம் உட்பட சில திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். இதேவேளை, பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தமது ஆழ்ந்த இரங்கலை வௌியிட்டு வருகின்றனர்.

Editor S.Shanuja January 26, 2024 January 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி விட்டு யாத்திரை சென்ற பெற்றோர் கைது!
Next Article நிறைவடைந்தது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்உலகச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

June 30, 2025
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?