ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.