1 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 03 கஜ முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் புத்தளம் குளக்கரை பகுதியில் முகவர்களை ஈடுபடுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பில் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.