By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் ஆரம்பம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் ஆரம்பம்!

Published September 14, 2024
Share
1 Min Read
SHARE

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமானது.

45ஆவது தடவையாக நடைபெறும் இந்த போட்டிகளானது எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடக்கிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும், 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும், 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், சமநிலைக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

‘ஸ்விஸ்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்.

TAGGED: செஸ் ஒலிம்பியாட்
Editor S.Shanuja September 14, 2024 September 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இன்றுடன் வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு!
Next Article 15 வயது மகளான சிறுமி துஷ்பிரயோகம்- வவுனியாவில் தந்தை கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையுடனான போட்டியில் வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து!

October 13, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையர் இருவருக்கு ஐ.சி.சி யின் சிறந்த வீரர் விருது!

September 16, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

10 ஆண்டுக்குப் பின் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது இலங்கை!

September 9, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

அமெரிக்க ஓபன் சம்பியன்;  பெலாரஸ் நாட்டை சேர்ந்தவர் வெற்றி!

September 9, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?