By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கொழும்புத் துறைமுக மனிதப்புதைகுழியில் 8 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கொழும்புத் துறைமுக மனிதப்புதைகுழியில் 8 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

Published October 3, 2024
Share
1 Min Read
SHARE

கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டு தற்போது காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் கட்ட அகழ்வு
அத்துடன் இதுவரை இரண்டு கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழாய்வு நடவடிக்கைள் தொடங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எச்சங்களின் தோற்றம் மற்றும் சூழல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள்
கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கொழும்புத் துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

TAGGED: எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
Editor S.Shanuja October 3, 2024 October 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தமிழ்த் தேசிய அரசியலில் நிராகரிக்க முடியாத தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியே : கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு!
Next Article ஓய்வை அறிவித்தார் : மகிந்த யாப்பா அபேவர்தன!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்த CID!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சி யாழ் பல்கலை பாதுகாவலர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்

பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள் போதை மாத்திரை உட்கொண்ட நிலையில் கைது!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

இனியபாரதியின் மற்றொரு சகா கைது – CID விசாரணைகள் தீவிரம்!

July 28, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?