By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செனவிரத்னவை பதவி நீக்குமாறு உதய கம்மன்பில தெரிவிப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செனவிரத்னவை பதவி நீக்குமாறு உதய கம்மன்பில தெரிவிப்பு!

Published October 21, 2024
Share
1 Min Read
SHARE

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ் ” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (21) வெளியிட்டார்.

ஐ.எம்.இமாம் அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமது அரசியல் இலாபத்துக்காகவும் தமது சகாக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே இவ்விரு அறிக்கைகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடாமல் இருக்கிறார்.

அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.

எனவே, அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாமை மற்றும் அறிக்கைகளை மூடி மறைத்தமைக்காக ஜனாதிபதி பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார்

TAGGED: செனவிரத்னவை பதவி நீக்க வேண்டும்
Editor S.Shanuja October 21, 2024 October 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இன்று முதல் வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம்!
Next Article வைத்தியருடன் தகராறு : சந்தேக நபர்கள் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு அஞ்சும் கோத்தா!

July 31, 2025
அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

வடக்கில் இடியுடன் கூடிய கன மழை–எச்சரிக்கை!

July 31, 2025
இலங்கைச் செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபம்!

July 31, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்த CID!

July 28, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?