By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: விஜய் விடுத்துள்ள உத்தரவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

விஜய் விடுத்துள்ள உத்தரவு!

Published November 12, 2024
Share
2 Min Read
SHARE

தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் செய்த ஊழல்கள் பற்றி முழு தகவல் திரட்டி ஆதாரங்களுடன் தனக்கு அனுப்பும்படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். புகார்களை துறை வாரியாக தொகுத்து, கவர்னரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொண்டு, ஒரு குடும்பமே அதிகார துஷ்பிரயோகம் செய்து கொள்ளை அடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சம்பாதிப்பதாகவும், த.வெ.க.,வை துவக்குவதற்கு முன், விஜய்க்கு அவரது ரசிகர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

சாம்பிளுக்கு சில புகார்களை தேர்வு செய்து, தனியார் புலனாய்வு நிறுவனம் வாயிலாக விசாரிக்க அவர் ஏற்பாடு செய்தார். புகார்கள் உண்மையானவை என்று தெரியவந்ததும், அவற்றை துறை வாரியாக பிரித்து, தேதி வாரியாக தொகுக்க தனி டீம் உருவாக்கினார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மேடைக்கு மேடை ஊழல் புகார்களை பேசினாலும், சமூகத்தில் அது தாக்கம் எதையும் ஏற்படுத்தாதது ஏன் என்று, தன் கட்சி நிர்வாகிகளை அழைத்து கேட்டிருக்கிறார்.

ஸ்டாலின் மீதும், ஓரிரு அமைச்சர்கள் மீதும், அ.தி.மு.க.,வினர் குற்றம் சொல்கின்றனரே தவிர, ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களின் கண் முன் நடக்கும் ஊழல்கள், அட்ராசிட்டிகளை ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என, நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அதை விஜய் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தி வந்தார்.

அதன் விளைவாக, தி.மு.க.,வின் ஊழல்களையும், அத்துமீறல்களையும் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவது என்று விஜய் தீர்மானித்தார்.

ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் முறைகேடு செய்கின்றனர்; பினாமிகள் யார் என்ற விபரங்களை தவறாமல் சேகரிக்க அறிவுறுத்தினார். ஆதாரங்கள் இல்லாமல் புகார்களை அடுக்கினால், வழக்குகள் வரிசைகட்டி வரும் என்றும் நிர்வாகிகளை அவர் எச்சரித்தார்.

அப்படி திரட்டப்படும் ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் பட்டியல் தயாரித்து, கவர்னரை சந்தித்து அளிக்கலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளார்.

மாநாட்டுக்கு பிறகான தன் முதல் அரசியல் நிகழ்வாக இது அமையும் என்றும், பகிரங்கமாக தெரியாமல் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வரும் ஆளுங்கட்சிக்கு செக் வைக்க உதவும் என்றும் விஜய் கூறியிருக்கிறார்.

‘வெறும் அறிக்கை அரசியலை தளபதி விரும்பவில்லை; வாதங்களை விட ஆதாரங்களே பேசும் என்று நம்புகிறார்.

‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் எம்.ஜி.ஆர்., வழங்கிய நிகழ்வு, தமிழக அரசியலின் பாதையை மாற்றியது. அதே திருப்பம், 2026க்கு முன் நிகழும்’ என்று, த.வெ.க.,வின் முக்கிய நிர்வாகி குறிப்பிட்டார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும், அப்படி ஒரு ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். ஆனால், பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லையே என்று கேட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர்.

TAGGED: விஜய்
Editor S.Shanuja November 12, 2024 November 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article  நிவாரணம் குறித்து கலந்துரையாடல்!
Next Article ரிசாட் – மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?