By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading:  தமிழக கடற்றொழிலாளர்களுக்கு விடுதலை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு விடுதலை!

Published October 11, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நீதிமன்ற உத்தரவானது, நேற்றையதினம் (10) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும், இழுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 2 வருட சிறை தண்டனை 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்துள்ளதுடன் நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டனர்.

நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
மேலும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவு வழங்குமாறு நீதவான் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த நிலையில், விடுதலையான 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் மிகிரியான தடுப்பு முகாம் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மன்று உத்தரவிட்டுள்ளது.

TAGGED: இந்திய கடற்றொழிலாளர்கள்
Editor S.Shanuja October 11, 2024 October 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article   சகோதரிகளை கொலை செய்த சிறுமி : ரஷ்யாவில்  சம்பவம்!
Next Article வெள்ளப்பெருக்கால்  கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?