By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் இறந்தவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் மரண விசாரணை அதிகாரிகள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் இறந்தவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் மரண விசாரணை அதிகாரிகள்!

Published October 13, 2024
Share
1 Min Read
SHARE

யாழில் (Jaffna) உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள், மரணத்தில் இலஞ்சம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்ஸுக்கு (France) அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரியொருவர் பருத்தித்துறையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.

15 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்று அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் (Goonarojan) தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மேற்படி மரண விசாரணை அதிகாரியை கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தொகைப் பணத்தைத் திரும்ப வழங்கியதைத் தொடர்ந்து அவரைப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.

இது இவ்வாறு இருக்கையில் யாழில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள் மரணத்தில் இலஞ்சம் தேடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இறந்த உடலங்கள் மீது விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

தவறான முடிவெடுத்து இறப்பவர்களின் மரண விசாரணைகளை மேற்கொள்ளும் போது, அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறித்த மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கும் போது, மக்களும் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

அத்தோடு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவம் ஒன்று அண்மையில் கூட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் மேலிடங்களுக்கு முறைப்பாடு வழங்கியும் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கவில்லை என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: இலஞ்சம்
Editor S.Shanuja October 13, 2024 October 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சஜித் அணிக்குள் கடும் மோதல் : முஜிபுர் ரஹ்மான்!
Next Article முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?