By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஐக்கிய மக்கள் சக்தியால் முடியும் : சஜித் பிரேமதாச!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தியால் முடியும் : சஜித் பிரேமதாச!

Published October 28, 2024
Share
3 Min Read
SHARE

புதிய இராஜதந்திர உறவுகளை பேண முடியுமான அவருக்கு இருந்த இரண்டு சந்தர்ப்பங்களை தற்போதைய ஜனாதிபதி தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், வரிகளை குறைக்க முடியாவிடின், எங்களால் வரிகளை குறைக்க முடியும் என்றார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான வெற்றியைப் பெறும். மக்கள் விடுதலை முன்னனணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்தால் வரிச்சூத்திரத்தை மாற்றுவேன், பெறுமதி சேர் வரி (வற்), நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைப்பேன் என தெரிவித்தார்.

என்றாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அந்த வரிகளை குறைப்பதில் உடன்பாடு காணப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேர்தலின் போது வரியைக் குறைப்பதாகச் சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை உரியவாறு அவரால் செய்ய முடியாதுபோயுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றும் கூட ஜனாதிபதியால் வரிகளை குறைக்க முடியவில்லை. மக்கள் விடுதலை முன்னணியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில், சர்வதேச நாணய நிதியனத்தின் ( IMF) பிரதிநிதிகளை சந்தித்து, நாட்டு மக்களின் ஆணை எமக்கு கிடைத்தால் IMF சட்டகத்திற்குள் இருந்தவாறு வரி சூத்திரங்களை மாற்றுவோம் என்ற இணக்கப்பாட்டை அவர்களோடு எட்டியிருந்தோம். அப்போது சர்வதேச நாணய நிதியம் அதற்கு இணக்கம் தெரிவித்தது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் செய்ய முடியாததை ஐக்கிய மக்கள் சக்தியால் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோமாகம தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (27) ஹோமாகம நகரில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோமாகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எரந்த வெலியங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் 4 வருடங்களில் அதாவது 2028 இல் மீண்டும் கடனை செலுத்த வேண்டும். முந்தைய அரசு இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டது. 2033 ஆம் ஆண்டு கடனை செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தானாகவே இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே, 2028 ஆம் ஆண்டு முதல் கடன் செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ளக்கூடிய நாடாக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இன்னும் வேகமெடுக்கவில்லை. இன்றும் இந்த தருணத்திலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்க பலம் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளுக்கு இணங்க பராட்டே சட்டம் கூட டிசம்பர் 15 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதுவரை உருவாக்கப்பட்ட தேசியப் பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கமானது கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக அமைந்து காணப்படுகிறது. யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த நாட்டிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றே நான் பிரார்த்திக்கின்றேன். பொறாமைத்தன அரசியலை பின்பற்றாத நபர் என்ற அடிப்படையில் இதய சுத்தியுடன் பிரார்த்தின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொரானா கோவிட் மற்றும் வங்குரோத்து நிலைக்கு உள்ளான ஒரு நாடு என்ற வகையில், இந்த தேசிய பாதுகாப்பு பிரச்சினை நாட்டை பாதித்தால் நாடு மேலும் வங்குரோத்தடையும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தேங்காய் வரிசையை நிறுத்த முடியாத மற்றும் பொருட்களின் விலையை குறைக்க முடியாத அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் வெற்றிகரமான ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கூட 220 இலட்சம் மக்களுக்கு பாரிய எதிர்மறையான அழுத்தங்களை பிரயோகித்தார். இனியும் இதை தொடர முடியாது. ஒரு நாடாக ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

TAGGED: சஜித் பிரேமதாச
Editor S.Shanuja October 28, 2024 October 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Next Article ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?