By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் நேற்றும் மலேரியா பாதிக்கப்பட்டவர் இனங்காணப்பட்டார்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் நேற்றும் மலேரியா பாதிக்கப்பட்டவர் இனங்காணப்பட்டார்

Published January 4, 2022
Share
2 Min Read
SHARE

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (03) ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது.

இவர் அண்மையில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு சென்றுள்ளார். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டமை தொடர்பாக இன்று (04) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது நாட்டில் இருந்து பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு எத்தனிக்கின்றனர். அவர்கள் அங்கு செல்வதற்காக முதலில் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்கிறார்கள்.

அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான பயணங்கள் தடைப்பட்டதும் மீண்டும் திருட்டுத்தனமாக எமது நாட்டிற்குள் வருகின்றார்கள். இவர்கள் மலேரியா உள்ள இடத்தில் இருந்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு அந்த நாடுகளில் சிலவேளை மலேரியா காய்ச்சலும் ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு வருபவர்கள் மீண்டும் எமது பிரதேசத்தில் மலேரியாவை தோற்றுவிக்கின்றார்கள்.

மிக அண்மையில் 3 மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டமை பாரியதொரு அபாய நிலையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எனவே நாங்கள் எமது மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் வேளையில் அவர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டால் மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மலேரியா உள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் அதற்குரிய தடுப்பு மருந்துகளை எந்த ஒரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது 3 மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்டதால் எமது பிரதேசத்திலிருந்து வரும் அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்தால் நல்லது. அடுத்ததாக நாங்கள் நுளம்பு கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தற்போது மலேரியா நோய் இனங்காணப்பட்டதால், மலேரியா கிருமியானது ஒருவரில் குறைந்தது 21 நாட்கள் வரை இருக்கலாம். அத்துடன் நுளம்பிலும் 21 நாட்கள் வரை இருக்கலாம்.

எனவே 21 நாட்களுக்கு நாங்கள் எமது சுற்றாடலை சுத்தப்படுத்துவதனால் இந்த மலேரியா கிருமி எமது சமூகத்தில் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்குரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை, கொக்குவில் பிரதேச சபை முன்னெடுத்தால் நல்லது. வருமுன் காப்பதனால் பெருமளவு நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். இது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக கொவிட் தொற்றுக்குப் பின்னர் பல நாடுகளில் மலேரியா மீண்டும் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையும் பாதிக்கப்பட்டதை நாம் விழிப்புடன் உணர்தல் வேண்டும் – என அவர் மேலும் தெரிவித்தார்.

TAGGED: யாழ்ப்பாணம்
oira8 January 4, 2022 January 4, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article புதிய ஆண்டுக்கான பணிகள் உறுதிமொழியுடன் ஆரம்பம்
Next Article புதுயுகம் இணையத்தளமும் அறம் பழகு அறக்கட்டளையும் இணைந்து நடாத்தும் கருத்தரங்கின் வளவாளர்கள் விபரம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?