By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!

Published May 20, 2023
Share
1 Min Read
SHARE

பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு,
கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த 42 வயதான R. ராஜகுமாரி சார்பில் சட்டத்தரணி சேனக்க பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகினர்.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா
என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸார் இதன்போது மன்றில் தெரிவித்ததாக
சட்டத்தரணி சேனக்க பெரேரா கூறினார்.

பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள்,
இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராக வேண்டுமெனவும் அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் பின்னர் மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சேனக்க பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் 10,000 ரூபா பணம் இறந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த
மரணத்தை மறைப்பதற்காகவா இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக
சம்பவத்தில் உயிரிழந்த R.ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

TAGGED: பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
oira8 May 20, 2023 May 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
Next Article உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்கள் உடனடி பலன்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?