மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கு மாகாணத்தில் உதவி !
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினரால் 24.05.2024 அன்று மட்டக்களப்பு சித்தாண்டி கிராமத்தில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றிற்கு சமையல் கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடை மற்றும் எண் கணித விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் முன்பள்ளியினை சுற்றி கம்பி வேலியும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே பழுதடைந்திருந்த விளையாட்டு உபகரணங்களும் திருத்தம் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.