By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பீரிஸ் டலஸ் உள்ளிட்ட மொட்டுவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி வரிசையில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பீரிஸ் டலஸ் உள்ளிட்ட மொட்டுவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி வரிசையில்!

Published August 31, 2022
Share
2 Min Read
SHARE

பீரிஸ், டலஸ் உள்ளிட்ட மொட்டுவின்
13 எம்.பிக்கள் எதிரணி வரிசையில்!

சுயாதீனக் குழு என்று அவர்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் சுயாதீனக் குழுவாக எதிரணி வரிசையில் இன்று அமர்ந்துள்ளனர்.

இதனை மொட்டுக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ், சபையில் இன்று பகிரங்கமாக அறிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.

இதன்போது, விசேட உரை ஒன்றை நிகழ்த்திய நாடாளுமன்ற பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,

“கடந்த காலங்களில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்ததைப் போன்றே தற்போது மீண்டு வருவதற்கான சக்தி மக்களிடம் உண்டென நம்புகின்றேன்.

அந்தக் காலங்களின் மக்கள் கருத்துக்குச் செவிசாய்க்கும் நாடாளுமன்றம் ஒன்று இருந்தது. நாட்டின் பொதுக் கருத்துக்கும் நாடாளுமன்றின் நிலைப்பாட்டுக்கும் பரஸ்பர வேறுபாடு உள்ளது.

இது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

மக்கள் எம்மிடம் எதனையும் கோரவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்களை நாமே முன்வைத்தோம்.

அதன் பிரதிபலிப்பாக எமக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், ஆளும் கட்சியின் சிலரது செயற்பாடுகளால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது.

இன்று மக்கள் விரும்பும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படுவது மிக பாரதூரமானதாகும்.

எனவே, இவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினர்களாக அமரத் தீர்மானித்துள்ளோம்.

இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ச, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.

எவ்வாறாயினும், மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுமாயின் அதற்குத் தராளமாக எமது ஆதரவை வழங்குவோம்” – என்றார்.

TAGGED: பீரிஸ் டலஸ் உள்ளிட்ட மொட்டுவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி வரிசையில்!
oira8 August 31, 2022 August 31, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article போருக்குப் பின் பெண் புலிகள் நிலை என்ன!_கருணாகரன்!
Next Article சர்க்கரை நோயை தடுப்பதுடன் உடற் பருமனைக் குறைக்கும் கோவைக்காய்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?