குருநாகலில் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது
குருநாகல் மாவட்டத்தின் வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 74 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரந்தெனியையைச் சேர்ந்தவராவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான மகள் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பக் கட்ட விசாரணையில், சந்தேகநபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Editor: கதிர்