கொழும்பு – மே 13, 2025:
கொட்டாஞ்சேனையில் கடந்த வாரம் சம்பவமான சிறுமி மரணம் தொடர்பான விசாரணை அரசியல் மட்டத்தில் தீவிரமாக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்திக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் விசாரணை தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, சம்பவம் தொடர்பான அனைத்து பரிமாணங்களும் பாரபட்சமின்றி, விரைவாக, நியாயமாக விசாரிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். பாடசாலை மற்றும் Tuition வகுப்புகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு நேரடி உத்தரவுடன் வழிநடத்தினார்.
பிற்பகுதியில், சம்பவத்துக்குப் பின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய உட்புற ஆய்வை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அரச அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடப்பட்டதோடு, சிறுவர் நல நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த குழு, நடவடிக்கைகளை கண்காணித்து நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை வகிக்கிறது.
இக்கலந்துரையாடலில்,
-
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,
-
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,
-
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.