அனுராதபுரம் – கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை முடிந்தபின், சிறுமி பாடசாலை பேருந்தில் ஏற முயன்றபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்டபோதும் மரணத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை.
இதனால், உடல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மருத்துவ பரிசோதகரிடம் அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.