யாழ்ப்பாணம் – ஜூலை 28:
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே உயிரிழந்துள்ளார். திருமணமாகாமல் தனது சகோதரியுடன் வசித்து வந்த இவர், கடந்த சில காலங்களாக மனவெறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் (28), மதிய உணவுக்குப் பின்னர், தன்னைத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீவிபத்து காரணமாக கடுமையாக காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் உயிரிழந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.