By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செம்மணி:வெள்ளைக்கொடி விவகாரம் உட்பட அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது _ பிரதமர் ஹரிணி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செம்மணி:வெள்ளைக்கொடி விவகாரம் உட்பட அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது _ பிரதமர் ஹரிணி!

Published September 8, 2025
Share
1 Min Read
SHARE

கொழும்பு | 08 செப்டம்பர் 2025

பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை மகிழ்விப்பதற்கோ திருப்திப்படுத்துவதற்கோ அல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசின் கடமையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“உண்மையில் கடந்த ஆட்சிகள் ஜெனிவாவில் உறுதிமொழிகளை வழங்கியும் அவற்றை உள்நாட்டில் நிறைவேற்றத் தவறியதால் தான் இலங்கை மீது குற்றச்சாட்டுகள் வலுப்பெற்றுள்ளன.

எமது அரசு கொள்கை ரீதியாக மனித உரிமை விசாரணைகளை முன்னெடுக்க உறுதியானது.

செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளிலும் சுயாதீனமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. யாரையும் பாதுகாப்பதற்காக அல்ல, நீதியை நிலைநிறுத்துவதற்காகவே இவ்விசாரணைகள் நடைபெறும்.”

இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்ற “வெள்ளைக்கொடி” சம்பவம் மாத்திரமல்ல, எந்தவொரு மனித உரிமை குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குட்படுத்தப்படும் என்றும், அதற்கு அரசு எந்தவித தடையும் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடமிருந்து பெற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்கள் இலங்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மக்களுக்கு, குறிப்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இந்த அரசு அவர்களுக்குரியது என்பதை உணர்த்துவதே எமது நோக்கம். ஜெனிவா சக்கரத்தில் சிக்கிக் கொள்ளாமல் வெளிவருவதே எமது முன்னுரிமை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கே அரசு முதன்மை அளிக்கும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

Editor: கதிர்

TAGGED: இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, செம்மணி புதைகுழி, ஜெனிவா குற்றச்சாட்டு, பொறுப்புக்கூறல் விசாரணை, மனித உரிமைகள், வெள்ளைக்கொடி, ஹரிணி அமரசூரிய
AdminWEB September 8, 2025 September 8, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அம்பாறை அதிர்ச்சி – கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் | பெற்றோர் சாட்சி(video)!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஅறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்காணொளிகள்செய்திகள்

அம்பாறை அதிர்ச்சி – கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் | பெற்றோர் சாட்சி(video)!

September 8, 2025
இலங்கைச் செய்திகள்

தமிழினப்படுகொலைக்கு துணை போன JVP _ அரியநேத்திரன்!

September 8, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து: 15 பேர் பலி – மக்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்பு!

September 5, 2025
இலங்கைச் செய்திகள்

கச்சத்தீவு ஒப்பந்தம்: 1974–1976 இந்தியா–இலங்கை உடன்படிக்கை முழு விவரம்!

September 3, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?