By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!

Published March 27, 2022
Share
1 Min Read
SHARE

புத்தூர் மேற்கு நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!

யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

புத்தூர் மேற்கு நவக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் எனும் 30 வயது இளைஞனே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக உறவினர்களால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் வீட்டு வளாகத்தில் இருந்து ஒருவர் ஓடுவதை அவதானித்து அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன் பக்கம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனைத் துரத்திச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் இளைஞன் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடியபோது வீட்டிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் அவரது கைத்தொலைபேசி காணப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 12ம் திகதி வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் சில நாட்களிற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டதாகவும் அவர்களில் இருவரே கைதுசெய்யப்பட்டு நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் ஏனைய மூன்று நபர்களும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: இளைஞன் கடத்தல், யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!, யாழ்ப்பாணம்
oira8 January 2, 2024 March 27, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் இளைஞன் வன்முறைக் கும்பலால் கடத்தல்!
Next Article முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?