By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: அராலிப் பகுதியில் வீடு தீக்கிரை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

அராலிப் பகுதியில் வீடு தீக்கிரை!

Published April 1, 2024
Share
1 Min Read
SHARE
அராலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து முற்றுமுழுதாக நாசமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் அராலி கிழக்குப் பகுதியில் உள்ள ஏரம்பு ராகவன் என்பவரது வீட்டில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

https://puthujugam.com/wp-content/uploads/2024/04/nnn222.mp4
https://puthujugam.com/wp-content/uploads/2024/04/nnn1.mp4

 

https://puthujugam.com/wp-content/uploads/2024/04/neruppu-2.mp4

 

இது தொடர்பில் தெரிய வருவதாவது,
வீட்டில் உள்ளவர்கள் அயலில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் திடீரென குறித்த வீட்டில் தீப்பிடித்துள்ளது.

வீடொன்று தீப்பிடித்து எரிவதை அவதானித்த அயல்வீட்டுக்காரர் ஒருவரே வீடு எரிகின்றது என சத்தமாகக் கூச்சலிட்டு தகவலைத் தெரியப்படுத்தினார்.

சம்பவம் அறிந்து வீட்டார் செல்ல முன்னர் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார், மின்சார சபையினர், தீயணைப்புப் பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதற்கிடையில் கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர்.

தீப்பிடித்ததற்கான காரணம் மின்னிணைப்பில் ஏற்பட்ட சேதமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சில நேரத்திற்குள் அங்கு விரைந்த மின்சாரசபையினர் கிராமம் முழுவதுமான மின்னிணைப்பை ஒரு சில மணிநேரம் துண்டித்தனர். இதனால் கிராமம் முழுவதும் பதற்றநிலை உருவாகியது. அதன்பின்னர் குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பிரிவினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவத்தில் வீட்டார் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. காணிப்பத்திரங்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள், வீட்டுத் தளபாடங்கள், ஆடைகள், தொலைக்காட்சிப் பெட்டி, பாடசாலைப் புத்தகங்கள் என வீட்டிலிருந்த அனைத்துமே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இறுதியாக சம்பவம் நடந்த பகுதிக்கு வட்டுக்கோட்டைப் பொலிஸார் வருகைதந்து பார்வையிட்டதோடு தீ எவ்வாறு பற்றியது, என்ன நடந்தது என்றவாறான விசாரணைகளை முன்னெடுத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

TAGGED: அராலி
Editor S.Shanuja April 1, 2024 April 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மட்டி எடுக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
Next Article முடங்கியது அவசர ஆம்புலன்ஸ் சேவை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?