By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நாடு முழுவதுமான வாக்கு  வீதம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நாடு முழுவதுமான வாக்கு  வீதம்!

Published November 15, 2024
Share
5 Min Read
SHARE

பத்தாவது நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை நேரடியாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்வதற்காக  நேற்று வியாழக்கிழமை அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 65 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

என்றாலும், இத்தேர்தலில் வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை போன்று வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டாததால் மந்தமான தேர்தலாகவே இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75.89 வீதமான வாக்குப் பதிவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 79.46 வீதமான வாக்குப் பதிவும் இடம்பெற்றிருந்த போதிலும் இம்முறை அண்ணளவாக 65 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்தது.

2023ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெற்ற இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், நேற்று  காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற்றது.

இம்முறை வாக்களிப்பு மிகவும் மந்தமான முறையில் இடம்பெற்றதுடன், மக்கள் வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. அதன் காரணமாக 65 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரவல் அமைப்பு தெரிவித்தது.

ஆனால், இலங்கை வரலாற்றில் பாரதூரமான அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்துள்ளதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் இதுவும் இம்முறை பதிவாகியிருக்கவில்லை என்றும் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இம்முறை தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 8888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 5,006 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

பிற்பகல் 2 மணிவரை 50 வீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன. பிற்பகல் 2 மணியின் பின்னர் மக்கள் ஓரளவு வாக்களிப்பில் ஆர்வம் காட்டியிருந்த போதிலும் மாலை 4 மணிக்கு வாக்களிப்புகள் நிறைவடையும் போது ஒரு சில மாவட்டங்களை தவிர மற்றைய மாவட்டங்களில் 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

மலையகத்தில் சில பிரதேசத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வாக்களிப்பில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அவதானிப்பின்படியும் மற்றும் தேர்தல் கண்கானிப்பு அமைப்புகளின் அவதானத்தின்படியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ள வாக்குப் பதிவு வீதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு,

கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்களை தெரிவு செய்யவதற்காக 15 தொகுதிகளில் 1,744,208 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்களை தெரிவு செய்யவதற்காக 13 தொகுதிகளில் 1,846,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 தொகுதிகளில் 1,004,120 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 66 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 13 தொகுதிகளில் 1,173,303 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 67 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டம்

மாத்தளை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 423,936 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 595,395 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 68 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டம்

காலி மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 10 தொகுதிகளில் 890,589
பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைதெரிவு செய்வதற்காக 674,914 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 512,721 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 60 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11 தொகுதிகளில் 583,752 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 69 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

வன்னி மாவட்டம்

வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 300,675 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 438,264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 61 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டம்

திகாமடுல்ல மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 541,875 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 62 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 307,304 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 67 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

குருநாகல் மாவட்டம்

குருநாகல் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 14 தொகுதிகளில் 1,396,290 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம்

புத்தளம் மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 651,933 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 56 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டம்

அனுராதபுரம் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7 தொகுதிகளில் 727,665 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

பொலனறுவை மாவட்டம்

பொலனறுவை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 345,771 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

பதுளை மாவட்டம்

பதுளை மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9 தொகுதிகளில் 693,360 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 66 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

மொனராகலை மாவட்டம்

மொனராகலை மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 391,714 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 61 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இரத்தினப்புரி மாவட்டம்

இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 தொகுதிகளில் 910,140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கேகாலை மாவட்டம்

கேகாலை மாவட்டத்தில் 9 உறுப்பினர்களைதெரிவு செய்வதற்காக 9 தொகுதிகளில் 699,849 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

நேற்றுமாலை 4 மணியளவில் வாக்களிப்புகள் முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

 

TAGGED: வாக்கு  வீதம்
Editor S.Shanuja November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article  தேர்தல் பிரச்சார முறைப்பாடுகள் அதிகரிப்பு!
Next Article முதல் இடத்தில் அநுர கட்சி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?