By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

Published June 30, 2025
Share
2 Min Read
SHARE

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று. உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி -சித்துப்பாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது.

1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி இரா ணுவத்தினரால் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய் யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற தாய் ராசம்மா, தம்பி பிர ணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக் கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கித் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

கிருஷாந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண் டனையை எதிர்கொண்ட இராணுவ சிப்பாயான சோமரத்ன ராஜபக்ச இலங்கை நீதிமன்றத்தில்  அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனிதப் புதைகுழிகள் வெளிச்சத்துக்கு வந்தன.

அவரது வாக்கு மூலத்தின்படி 1995 ,1996 வரை யான ஆண்டுகளில் இலங்கை, இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட் டுப் புதைக்கப்பட்டனர் என்றும் பத்துக்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடை யாளம் காட்டமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந் தங்களைத்தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான. பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மை யோர் இப்படிச் சிங்கள இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் தான் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும்.

மனிதப் புதைகுழிகள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும் என்றார்.

TAGGED: jaffna, Srilanka Tamil news
AdminWEB June 30, 2025 June 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!
Next Article பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?