By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!

Published August 4, 2025
Share
1 Min Read
SHARE

செம்மணி சமூக புதைகுழி இனப்படுகொலை தொடர்பான விசாரணையில், பிளவுகளை ஏற்படுத்தும் அரசியலை தவிர்த்து தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, சர்வதேச நீதிக்காக வலுவான குரல் எழுப்ப வேண்டும் என அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 

சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அவர், இன்று (04) வெளியிட்ட ஊடக அறிக்கையில், செம்மணியில் இருந்து தினமும் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்கள் மக்களின் மனதை உலுக்கும் நிலையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் மேலும், கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சோம ரத்தின ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கு எழுதியுள்ள சர்வதேச விசாரணைக்கான கடிதம், இலங்கையின் நீதித்துறை மற்றும் அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு நீதி வழங்காது என்பதற்கான சாட்சியாக உள்ளது என்றார்.

 

கடந்த காலங்களில் உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள் பலர் காணாமல் போனதையும், கொலை செய்யப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார். கிரிசாந்தி வழக்கில் குற்றவாளியான சோம ரத்தின, 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட செம்மணி சம்பவத்திற்கு சாட்சியாக இருப்பதாகவும், சர்வதேச விசாரணையில் சாட்சி அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

 

தமிழர்களின் நீதி கோரிக்கைக்கு வலு சேர்க்கும் இந்தக் கடிதம், ஆட்சியாளர்களுக்கு ஒரு சவாலாகும் என்றும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமித்து சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Editor: கதிர்

TAGGED: Sri Lanka News, Tamil news, அருட்தந்தை சத்திவேல், இனப்படுகொலை, கிரிசாந்தி கொலை வழக்கு, சர்வதேச விசாரணை, செம்மணி புதைகுழி, சோம ரத்தின ராஜபக்ச, தமிழ் அரசியல், யாழ்ப்பாணம்
AdminWEB August 4, 2025 August 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது!
Next Article அநுரகுமார திசாநாயக்க – மாறுபட்ட பணிவின் பிரதிபலிப்பு: ஜனாதிபதியின் நடத்தை இணையத்தை கவர்ந்தது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

அநுரகுமார திசாநாயக்க – மாறுபட்ட பணிவின் பிரதிபலிப்பு: ஜனாதிபதியின் நடத்தை இணையத்தை கவர்ந்தது!

August 6, 2025
இலங்கைச் செய்திகள்

தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

கடற்கரையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

செம்மணி படுகொலைகள்: சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ஷ சாட்சியம் பயன்படுத்த வேண்டும் – மனோ கணேசன்

August 4, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?