By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு!

Published August 12, 2025
Share
1 Min Read
SHARE

ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு

 

குருநாகல் – 12.08.2025

இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு எதிராக ரஷ்யாவில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

குருநாகல் மாவட்டம், மாவத்தகமையைச் சேர்ந்த லஹிரு காவிந்த என்பவர், இராணுவ சேவைக்குப் பின்னர் உக்ரைன் படையினருடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வந்துள்ளார். அவர் மீது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ரஷ்யாவின் குற்றவியல் விசாரணைகளின்படி, லஹிரு காவிந்த உள்ளிட்ட உக்ரைனின் வெளிநாட்டு சிப்பாய்கள் குழுவொன்று குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய பிரஜைகளான பொதுமக்களை அச்சுறுத்தி, விரட்டியடித்து, கொள்ளையடித்ததுடன், சில படுகொலைகளையும் நடத்தியுள்ளனர்.

 

இக்குழு சில மாதங்கள் அந்தப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த பின்னர் அங்கிருந்து அகன்றுள்ளது. இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாக போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

லஹிரு காவிந்த, கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலும் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

—

 

Editor: கதிர்

TAGGED: Sri Lanka Army, Tamil news, இலங்கை முன்னாள் சிப்பாய், உக்ரைன், குருநாகல், குர்ஸ்க் பிராந்தியம், கொமாண்டோ படைப்பிரிவு, போர்க்குற்ற வழக்கு, மாவத்தகமை, ரஷ்யா, லஹிரு காவிந்த
AdminWEB August 12, 2025 August 12, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிளிநொச்சியில் பெண் கொலை – தீவிர விசாரணை!
Next Article மின்னேரியாவில் பயணிகள் பேருந்து விபத்து – பலரின் நிலை மோசம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
உலகச் செய்திகள்

பலஸ்தீனத்திற்கு சர்வதேச ஆதரவு: ஐ.நா. வில் மஹ்மூத் அப்பாஸ் குற்றச்சாட்டு – காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!

September 26, 2025
Breaking newsஅறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்காணொளிகள்செய்திகள்

அம்பாறை அதிர்ச்சி – கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் | பெற்றோர் சாட்சி(video)!

September 8, 2025
இலங்கைச் செய்திகள்

தமிழினப்படுகொலைக்கு துணை போன JVP _ அரியநேத்திரன்!

September 8, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?