By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் குடும்பப் பெண் பலி, இளைஞர் படுகாயம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் குடும்பப் பெண் பலி, இளைஞர் படுகாயம்!

Published September 22, 2025
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் – 22 செப்டம்பர் 2025

கச்சாயில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி குடும்பப் பெண் பலி – இளைஞர் படுகாயம்

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 46 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று (21) காலை சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றது. குடும்பப் பெண்ணும் அவருடைய உறவுமுறை இளைஞருமானவர் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்குப் பிறகு குறித்த உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேவேளை, கனகலிங்கம் செந்தூரன் (22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Editor: கதிர்

TAGGED: இலங்கை செய்திகள், கச்சாய், குடும்பப் பெண் பலி, கொடிகாமம், சாலை விபத்து, மணல் ஏற்றிய உழவு இயந்திரம், யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்
AdminWEB September 22, 2025 September 22, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வவுனியாவில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு!
Next Article புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு – 17 தமிழர்கள் கொல்லப்பட்ட துயரநாள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?