By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கையில் இணைய வழி பாலியல் துஷ்பிரயோகங்கள் 50% அதிகரிப்பு – பொலிஸ் எச்சரிக்கை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கையில் இணைய வழி பாலியல் துஷ்பிரயோகங்கள் 50% அதிகரிப்பு – பொலிஸ் எச்சரிக்கை!

Published September 22, 2025
Share
1 Min Read
SHARE

கொழும்பு – 22 செப்டம்பர் 2025

இலங்கையில் இணைய வழி பாலியல் துஷ்பிரயோகங்கள் 50% அதிகரிப்பு – பொலிஸ் எச்சரிக்கை

இலங்கையில் இணையத்தின் மூலம் சிறுவர்களை குறிவைத்து இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்மா அதிபர் (ASP) உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு 18 வயதிற்குக் குறைவான 15 சிறுவர்கள் இணையத்தின் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 28 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 50% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2024ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை 206 சிறுவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக, 2024ஆம் ஆண்டு 375 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அதனுடன் தொடர்புடைய 114 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு இதுவரை 118 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ASP வுட்லர் தெரிவித்தார்.

சிறுவர்களோ, பெண்களோ தொடர்பான எந்தவொரு பிரச்சினைகளும் இருந்தாலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, அல்லது கீழ்க்கண்ட அவசர எண்களுக்கோ உடனடியாக தகவல் அளிக்கலாம் என அவர் அறிவுறுத்தினார்:

119, 118 – அவசர அழைப்பு எண்கள்

109-1997 – சிறுவர் பாதுகாப்பு அவசர அழைப்பு எண்

071 859 8888 – புதிய பொலிஸ் மா அதிபரின் நேரடி எண் (புகைப்படம்/வீடியோவுடன் முறைப்பாடு செய்யலாம்)

Editor: கதிர்

AdminWEB September 22, 2025 September 22, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு – 17 தமிழர்கள் கொல்லப்பட்ட துயரநாள்!
Next Article ‘சரி க ம ப’ மேடையில் அம்பாறை சபேஷனுக்கு சிறப்பான வாய்ப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?