By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

Published January 11, 2024
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீது நேற்றிரவு(10) பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

04 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் அதில் ஒன்று வீதியிலும் ஏனைய 3 குண்டுகள் பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீதும் வீழ்ந்துள்ளன. இவற்றில் ஒன்று மாத்திரமே தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது 1,200 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச்சென்ற போது, மண்டைதீவு பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை மன்றில் முன்வைத்த நிலையில் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் நேற்றிரவு(10) வீதித்தடை இடப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸ் காவலரண் அமைந்துள்ள பகுதியில் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் இருவர் 2 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய மேலும் நால்வர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் சகோதரர் மற்றும் அவரது குழுவினரே பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

AdminWEB January 11, 2024 January 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!
Next Article IMF பிரதிநிதிகள் நாட்டிற்கு விஜயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?