சுகாதார ஊழியர்களால் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற அரச வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவம் முன்வந்துள்ளது.
சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் 35,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி காலை 06.00 மணி முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கொடுப்பனவு, மற்றும் போக்குவரத்து உதவித்தொகையை ரூ.35,000 ஆல் உயர்த்தும் அரசின் முடிவை எதிர்த்து இந்த அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.
சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல அரச வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சுமூகமான நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட அரச வைத்தியசாலைகளில் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.