By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னாரில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னாரில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி!

Published January 20, 2024
Share
2 Min Read
SHARE

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று (19) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் சம்பவ இடத்தில் இருந்த பொது மக்களை கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும், அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு வைத்தியசாலையில் இல் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

சிறிய ரக பேருந்து ஒன்று மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேரூந்தையும், அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் இருந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவரின் உறவுகள் அவ்விடத்தில் கத்திக் கொண்டிருந்த போது தாக்கியதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் மணல் மண் கடத்தல் காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Editor S.Shanuja January 20, 2024 January 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மாத்தறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
Next Article செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் பிரதான சோதனைச் சாவடி அகற்றம்!

September 17, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் 90607 பேர் வாக்களிக்க தகுதி!

September 16, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்!

September 8, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார் அரியநேந்திரன்!

September 2, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?