கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதிகள் குழுவொன்று தப்பித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் அங்கு ஏற்பட்ட மோதலில், கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.