By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பவதாரணியின் திடீர் மரணம்; இடைநிறுத்தப்பட்டது இசை நிகழ்ச்சி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பவதாரணியின் திடீர் மரணம்; இடைநிறுத்தப்பட்டது இசை நிகழ்ச்சி!

Published January 26, 2024
Share
1 Min Read
SHARE

நாளை மற்றும் நாளைமறுதினம் ஏற்பாடு செய்யப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) ஆகிய தினங்களில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்றையதினம் (26) உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் காரணமாக நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Editor S.Shanuja January 26, 2024 January 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பத்தை கோரியது இந்தியா!
Next Article பொலிஸில் முறையிட்டதால் இளைஞன் மீது வாள்வெட்டு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் 66பேரை தெரிவு செய்ய 659பேர் போட்டி!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?