By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கைவிட்ட நிலையில் உயிரிழந்த சிசு; பெற்றோரைக் கைது செய்ய உத்தரவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கைவிட்ட நிலையில் உயிரிழந்த சிசு; பெற்றோரைக் கைது செய்ய உத்தரவு!

Published January 29, 2024
Share
1 Min Read
SHARE

11 நாட்களே ஆன சிசுவை வைத்தியசாலையில் பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் சிசு உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேம பி. தென்னகோன் குருநாகல் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பொலிஸாருக்கு குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.

குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் சில நாட்களுக்கு முன் ​வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதன்படி, உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் சட்டத்தரணி தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சிசுவின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கவனத்தில் கொண்ட பதில் நீதவான், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், தம்மி அபேசிங்க என்ற இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக அவர்கள் மறைந்திருக்கும் இடங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Editor S.Shanuja January 29, 2024 January 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு!
Next Article மகனின் தவறுதலான துப்பாக்கிச்சூடு; தந்தை உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் 66பேரை தெரிவு செய்ய 659பேர் போட்டி!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?