யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.