By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் இப்படியும் மோசடி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் இப்படியும் மோசடி!

Published April 2, 2024
Share
1 Min Read
SHARE

யாழில் இப்படியும் மோசடி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்ற சிறிது நாள்களில் தாயார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பமாகவிருந்த நிலையில், வெளிநாட்டிலுள்ள மகன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளருக்கு தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு, தனது தாயாரின் பெருவிரல் அடையாளத்தைப் பெற்று சொத்துக்களை மோசடியான முறையில் மாற்றம் செய்ய முயன்றுள்ளனர் என்ற தகவல் தனக்கு ஊரிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் சட்ட மருத்துவ நிபுணருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த பெண்மணியைப் பராமரித்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தாம் மருத்துவமனையில் சேர்க்கும்போது அவரது பெருவிரலில் எந்தவொரு மை அடையாளமும் இருக்கவில்லை என்றும் இப்போது அது எப்படி வந்தது என்பது தமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின்னரே உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் கையளிக்கப்படவுள்ளது.

TAGGED: மோசடி
AdminWEB April 2, 2024 April 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஈரான் இராணுவ தளபதிகளை போட்டுத்தள்ளிய இஸ்ரேல்!
Next Article நீதிமன்றை தவறாக வழிநடத்தியதாக பொலிஸாருக்கு எதிராக மனு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?