இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதீப் ஜயவர்தனவுக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த பிரதீப் ஜயவர்தன, 2017இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.
அதன்படி, இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.