By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் – பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் – பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!

Published December 30, 2021
Share
1 Min Read
SHARE

அதிபர் ஒருவர் இன்று (30) ஊடகவியலாளர்களை பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என கூறியுள்ளார். தேசிய பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்று காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கூட்டம் நடைபெற்றது. அதற்காக ஊடகவியலாளர்கள் பிரதேச சபைக்கு சென்று பிரதேச சபையின் வளாகத்தில் நின்றனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குறித்த பாடசாலையின் அதிபர் “கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நின்றமை தொடர்பான செய்தி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் நீங்களா பிரசுரித்தீர்கள்” எனக்கேட்டார்.

அதற்கு ஊடகவியலாளர்கள் குறித்த செய்தி தொடர்பான விபரங்கள் தேவைப்படின் அந்த ஊடக நிறுவனங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

இதையடுத்து குறித்த அதிபர் ஊடகவியலாளர்களை நோக்கி “நீங்கள் புலனாய்வாளர்கள் போல் பாடசாலைக்குள் நுழைந்தீர்கள், நீங்கள் புலனாய்வாளர்களா? 8ஆம் வகுப்பு வரைக்கும்தான் கல்வி கற்றுள்ளீர்களா என தெரியவில்லை. எனக்கூறினார். இதன்போது அதிபர் தனது கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்தார்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள், “வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தருகின்றோம், நீங்கள் இது தொடர்பாக அவரிடம் கூறுங்கள்” எனக்கூறி தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயற்சித்தவேளை அதிபர் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக அவர் ஊடகவியலாளர்களுக்கு உறுதியளித்தார்.

TAGGED: காரைநகர் அதிபர்
oira8 December 30, 2021 December 30, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் சுகாதார பிரிவினரால் போராட்டம்!
Next Article ஞானசாரதேரர் இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமால் ஆக்குவார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அச்சம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ் .உடுப்பிட்டியில் வீட்டு காணிக்குள் புகுந்த முதலை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?