By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மனைவி மீது துப்பாக்கிச்சூடு;  கணவர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மனைவி மீது துப்பாக்கிச்சூடு;  கணவர் கைது!

Published September 1, 2024
Share
1 Min Read
SHARE

பதுளை, ஹிந்தகொட பகுதியில் தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(31.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அந்தத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 5 , எஸ்.எப்.ஜி. ரக கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பெண் (வயது 33 வயது) கைதான நபரின் மனைவி என்றும், அந்தப் பெண்ணின் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்றும், பதுளை – பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவருடன் அவர் காதல் உறவு பேணி வந்த நிலையில் இதை அறிந்த மனைவி மேற்படி பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வேளையிலேயே கணவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மேற்படி சந்தேகநபர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரைப் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: கணவர் கைது, துப்பாக்கிச்சூடு, பதுளை
Editor S.Shanuja September 1, 2024 September 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கறுப்புப் பட்டி அணிந்து பட்டதாரிகள் போராட்டம்!
Next Article ரணிலுக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?