அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.