திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் முதல் புத்தளம் வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்ந்தும் கொந்தளிப்புடன் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.
டானா சூறாவளியின் தாக்கம் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையில் அவ்வப்போது பலத்த மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானம் செலுத்துமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.