By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: புகைப்படங்களை வைத்திருந்தால் எத்தனை பேரை அரசு கைது செய்ய வேண்டும் அரசு மீது சுரேஷ் பிறேமச்சந்திரன் விசனம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

புகைப்படங்களை வைத்திருந்தால் எத்தனை பேரை அரசு கைது செய்ய வேண்டும் அரசு மீது சுரேஷ் பிறேமச்சந்திரன் விசனம்

Published December 29, 2021
Share
1 Min Read
SHARE

இலங்கை அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக பார்த்தாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் புகைப்படம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் காணப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு, ஒன்றிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் தற்போது அவர்கள் மீது மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது . இது கண்டிக்கத்தக்க விடயம். படம் வைத்திருந்தால் பிரச்சினை என்றால் எத்தனை பேரை இவர்கள் இன்னமும் கைது செய்ய வேண்டும். இதனடிப்படையில் , இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது .

இளைஞர்களின் மீது உள்ள இப்படியான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். மீண்டும் பயங்கரவாத சட்டத்தை இறுக்கமாக்கும் முயற்சியில் அரசு எடுப்பட்டுள்ளது. அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக கூறினாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை.

“சேகுவரே” போராளியின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட ரீசேட்களை சிங்கள இளைஞர்களும் அணிந்துகொள்கின்றனர். அப்போது அவர்களை இந்த அரசு கைது செய்யுமா? காலத்துக்கு காலம் அரசு தனக்கு வேண்டாதவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGGED: யாழ்ப்பாணம் சுரேஷ் பிரமேச்சந்திரன்
oira8 December 29, 2021 December 29, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்
Next Article கொரோனாவினால் தத்தளிக்கிறது பிரான்ஸ்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?