இத்தருணத்தில் நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என்று சமூகத்தில் பேசப்படுகிறது. இத்தகையதொரு விவாதம் நடக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பு என்பதால் எந்த விவாதத்திற்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்த ஒரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட நான் தயார். அதேபோல் விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எந்த விவாதத்துக்கும் தயாராக இருப்பது போலவே நாட்டுக்கு சேவை செய்ய தன்னோடு போட்டிக்கு வருமாறு எந்தக் கட்சிக்கும் சவால் விடுப்பதாகவும், விவாதங்களை நடத்துதற்கு போலவே நாட்டிற்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் தயார் என மகிழ்ச்சியோடு கூறிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.