இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றார்.
கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் நேற்று நடந்து முடிந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் 184 வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையிலே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.